முளகுமூடு நாஞ்சில் பால் பதனிடும் நிலைய வளாகத்தில் பணியாளர்களுக்கான மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு நிலைய மேலாண்மை இயக்குநர் ஜெரால்டு ஜஸ்டின் தலைமை வகித்தார். இணை மேலாண்மை இயக்குநர் மனோகியம் சேவியர், நிதி பரிபலகர் ஆன்ட்ரூஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குலசேகரம் ஸ்ரீ மூகாம்பிகை மருத்துவக் கல்லூரி மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்தனர். இ.சி.ஜி. உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டன.