சபரிமலை விவகாரம்: குமரியில் நாளை கடையடைப்பு
சபரிமலை ஐயப்பன் கோயில் விவகாரம் தொடர்பாக, சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் புதன்கிழமை
சபரிமலை ஐயப்பன் கோயில் விவகாரம் தொடர்பாக, சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் புதன்கிழமை (அக். 24) கடையடைப்பு, போராட்டம் நடைபெற உள்ளதாக அனைத்து வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற உள்ளது. அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் காந்தி மண்டபம் முன் புதன்கிழமை காலை 8 மணி முதல் பிற்பகல் 1 மணிவரை போராட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போராட்டத்தில் தென்குமரி வியாபாரிகள் சங்கம், காந்திஜி கடை வியாபாரிகள் சங்கம், பார்க் வியூ பஜார் சங்கம், தமிழ் அன்னை வியாபாரிகள் சங்கம், கடற்கரைச் சாலை வியாபாரிகள் சங்கம், விவேகானந்தா சிறு முதலீட்டு வியாபாரிகள் சங்கம், பகவதியம்மன் வளாக வியாபாரிகள் சங்கம், நட்சத்திர வியாபாரிகள் சங்கம் உள்ளிட்ட சங்கங்கள் பங்கேற்க உள்ளன.