"ரப்பர் விவசாயிகள் மானியம் பெற விண்ணப்பிக்கலாம்'
குமரி மாவட்டத்தில் ரப்பர் விவசாயிகள் மானியம் பெற விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் ரப்பர் விவசாயிகள் மானியம் பெற விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மார்த்தாண்டம் ரப்பர் வாரிய அதிகாரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ரப்பர் தோட்ட வளர்ச்சித் திட்டத்தில் 2017ஆம் ஆண்டு ரப்பர் மறு மற்றும் புது நடவு செய்த சிறு விவசாயிகள், ரப்பர் வாரியத்தின் மானியம் பெற விண்ணப்பிக்கலாம்.
ஒரு ஹெக்டேருக்கு ரூ. 25 ஆயிரம் மற்றும் ரூ. 5 ஆயிரம் ரப்பர் செடிகளுக்காகவும் வழங்கப்படும். பட்டியல் இனத்தவருக்கு ரூ. 40 ஆயிரம் மற்றும் ரூ. 5 ஆயிரம் ரப்பர் செடிகளுக்காகவும் வழங்கப்படும். மானியம் பெற விண்ணப்பப் படிவங்களை ரப்பர் வாரிய இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து, உரிய ஆவணங்களுடன் வரும் அக். 31ஆம் தேதிக்குள் ரப்பர் வாரிய மண்டல அலுவலகம், மார்த்தாண்டம் அல்லது குலசேகரம், குழித்துறை கள நிலையங்களில் சமர்ப்பிக்கவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.