கன்னியாகுமரி

புதுக்கடை அருகே வங்கி ஊழியரிடம் ரூ. 70 ஆயிரம் பறிப்பு

DIN

குமரி மாவட்டம்,  புதுக்கடை அருகே வங்கி ஊழியரிடம் ரூ. 70 ஆயிரத்தை  பறித்து சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
குமரி மாவட்டம், புதுக்கடையை அடுத்த பைங்குளத்தை சேர்ந்தவர் தினேஷ் (28). இவர், பாண்டியன் கிராம வங்கியில் தற்காலிக பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் சனிக்கிழமை  மாலை வழக்கம் போல் வங்கிப் பணிகளை முடித்து விட்டு,  தனது நண்பரிடம் ரூ. 70 ஆயிரம் கடனாகப் பெற்றுக் கொண்டு  வீடு திரும்பிக் கொண்டிருந்தாராம். 
பைங்குளம் அருகே வரும்போது, 5 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து கையில் இருந்த பணத்தை பறித்துச் சென்றனர்.இதுகுறித்து புதுக்கடை போலீஸில் தினேஷ் அளித்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்த போலீஸார், பணத்தை பறித்து கொண்டு தப்பியோடிய நபர்களை தேடி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘கேஜரிவால் ஒரு சிங்கம்; யாராலும் வளைக்க முடியாது’: மனைவி சுனிதா கேஜரிவால் பெருமிதம்

திருவாரூா் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு கண்டறியும் குழுவினா் சோதனை

படிப்புடன் கூடுதல் திறமைகளை வளா்த்துக்கொள்ள வேண்டும்: மாநில தகவல் ஆணையா்

ஏரி, குளங்களை தூா்வார நிதி ஒதுக்க வேண்டும்: மாா்க்சிஸ்ட் வலியுறுத்தல்

ஆட்டோ ஓட்டுநா் வெட்டிக் கொலை

SCROLL FOR NEXT