கன்னியாகுமரி

ஆக. 30 இல் மீனவர் குறைதீர் கூட்டம்

DIN

கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களுக்கான குறைதீர் கூட்டம் இம்மாதம் 30 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை)  நடைபெறுகிறது.
இது குறித்து, ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மீனவர்களுக்கான குறைதீர் கூட்டம் ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் 30 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. எனவே, மீன்வளத்துறை, பிற அரசுத் துறைகளால் நிறைவேற்றப்பட வேண்டிய மீனவர்களின் குறைகள், கோரிக்கைகள், தேவைகள் அடங்கிய மனுக்களை இக்கூட்டத்தில் நேரில் வழங்கலாம். பிற அரசுத் துறைகள் சார்ந்த கோரிக்கைகளை ஒரே மனுவில் கொடுக்காமல் துறை வாரியாக தனித்தனி மனுவாக அளிக்க வேண்டும். மனுக்கள் சம்பந்தப்பட்ட பிற அரசுத்துறை அலுவலர்களுக்கு அனுப்பி நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதுடன், அதன் விவரம் அடுத்த மீனவர் குறைதீர் கூட்டத்தில்  தெரிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

8 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

இம்பாக்ட் பிளேயர் விதி வெற்றிக்கு உதவியது: கேகேஆர் கேப்டன்

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

SCROLL FOR NEXT