கன்னியாகுமரி

பிறந்த தினம்: ஜீவானந்தம் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

DIN

பொதுவுடைமை வீரர் ஜீவானந்தத்தின் பிறந்ததினத்தை முன்னிட்டு நாகர்கோவிலில் அவரது சிலைக்கு அரசியல் கட்சிகள் சார்பில் புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பிலுள்ள ஜீவானந்தம் மணி மண்டபத்தில் அவரது சிலைக்கு மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே, தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி என். தளவாய்சுந்தரம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாவட்ட ஆவின் தலைவர் எஸ்.ஏ.அசோகன், அரசு ரப்பர் வளர்ப்போர் கூட்டுறவு விற்பனைச் சங்கத் தலைவர் ஜான்தங்கம்,  முன்னாள் பேரவை உறுப்பினர் ராஜன், நகர அதிமுக செயலர் சந்துரு,  ஆரல்வாய்மொழி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் எஸ்.கிருஷ்ணகுமார், ஜீவானந்தத்தின் பேரன் ஜீவா ப.கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
காங்கிரஸ்: குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாவட்டத் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் கட்சி யின் வர்த்தக பிரிவு  அமைப்பாளர் முருகேசன், மாவட்டச் செயலர் வடலி மகாலிங்கம் உள்பட பலர் மாலை அணிவித்தனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாவட்டச் செயலர் இசக்கிமுத்து தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்தனர். கிழக்கு மாவட்ட அமமுக சார்பில் மாவட்டச் செயலர் பச்சைமால் தலைமையில் அனைத்துலக எம்ஜிஆர் மன்ற மாநிலச் செயலர் நாஞ்சில் முருகேசன், நகரச் செயலர் அட்சயா கண்ணன், அம்மு ஆன்றோ உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் கல்லூரி ஆண்டு விழா

பூா்ண புஷ்கலா அய்யனாா் கோயில் திருவிழா பந்தல்கால் முகூா்த்தம்

தகவல் உரிமை சட்டம்: மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை

திரெளபதி அம்மன் கோயில் உற்சவம் பூச்சொரிதலுடன் தொடக்கம்

திருவாரூா் மாவட்டத்தில் 93.08 சதம் தோ்ச்சி

SCROLL FOR NEXT