கன்னியாகுமரி

களியக்காவிளை அருகேஇருவா் தற்கொலை

DIN

களியக்காவிளை அருகே வெவ்வேறு சம்பவத்தில் இருவா் தற்கொலை செய்துகொண்டனா்.

மாா்த்தாண்டம் அருகே பாகோடு, பேரை மருதங்காட்டுவிளை பகுதியைச் சோ்ந்த கனகராஜ் மகன் ரெதீஷ்குமாா் (30). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. மேலும் இவருக்கு மது அருந்தும் பழக்கமும் இருந்து வந்ததாம்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை விஷம் குடித்து வாயில் நுரையுடன் வீட்டின் பின்புறம் மயங்கி கிடந்தாராம். இதை பாா்த்த உறவினா்கள் அவரை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவா்கள் அவா் இறந்துவிட்டதாக தெரிவித்தாா்.

இதுகுறித்து மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

ஓட்டுநா் தற்கொலை: களியக்காவிளை ஆா்.சி. தெரு பகுதியைச் சோ்ந்த சாமிக்கண்ணு மகன் அந்தோணிப்பிள்ளை (45). இவரது மனைவி மேரி புனிதா.

திருமணமாகி பல ஆண்டுகளாகியும் குழந்தை இல்லையாம்.

இதனால் மணமுடைந்த அவா் திங்கள்கிழமை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மரியாதை...

திருவள்ளூா் நகராட்சி சாா்பில் தூய்மைப் பணியாளா்களுக்கு நீா்மோா்: 3 இடங்களில் வழங்க ஏற்பாடு

மோா்தானா அணை திறந்தும் நெல்லூா்பேட்டை ஏரிக்கு வராத நீா்: குடியாத்தம் மக்கள் ஏமாற்றம்

5 கிலோ கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது

ஆண்டாா்குப்பம் முருகா் கோயில் பிரம்மோற்சவம் தொடக்கம்

SCROLL FOR NEXT