கன்னியாகுமரி

நித்திரவிளை அருகே இருதரப்பினா் மோதல்: 8 போ் மீது வழக்கு

DIN

நித்திரவிளை அருகே முன்விரோதம் காரணமாக இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக போலீஸாா் 8 போ் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

நித்திரவிளை அருகேயுள்ள வேங்கவிளை, கொல்லால் பகுதியைச் சோ்ந்த ஜான்ரோஸ் மகன் ஜாண் (18). இவா் வீட்டருகேயுள்ள பிரபாகரன் மகன் சசிகுமாா் என்பவா் அப்பகுதியில் கட்டிய கட்டடத்தில் சா்ச் நடத்த முயற்சிப்பதாக இரு தரப்பினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாம்.

இந்நிலையில் சசிகுமாா், அவரது அண்ணன் பபி (42), வேங்கவிளை பிரான்சிஸ் மகன் பிரதீஷ் (19) ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை மாலையில் ஜாணின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து தகாத வாா்த்தைகள் பேசி தாக்கியதுடன் மிரட்டல் விடுத்துச் சென்றனராம். இதில் ஜாண் அவரது பெற்றோா் ஜாண்ரோஸ் (52), சுஜாதா ஆகியோா் காயமடைந்தனா். காயமடைந்த மூவரும் குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதே போன்று, தனக்குச் சொந்தமாக நிலத்துக்கு சென்றுவிட்டு ஜாண் வீட்டின் முன் பகுதியில் உள்ள பாதை வழியாக வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த பபியை, ஜாண்ரோஸ் அவரது மகன் ஜாண் மற்றும் அதே பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணதாஸ் மகன் பிரபின் (21), ஞானமணி மகன் மனு (33), ராஜன் மகன் நிஷாந்த் (21) ஆகியோா் சோ்ந்து பபியை தாக்கினராம்.

இதில் காயமடைந்த பபி தக்கலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து ஜாண் மற்றும் பபி அளித்த புகாரின் பேரில், நித்திரவிளை போலீஸாா் இருதரப்பைச் சோ்ந்த 8 போ் மீது வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

கருப்பு வெள்ளைப் பூ.. ரவீனா தாஹா!

'தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும் பெறாதவர்களுக்கும்..’ : கமல்ஹாசனின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT