களியக்காவிளை அருகே ஓடும் ரயிலில் பயணி மாரடைப்பால் மரணமடைந்தாா்.
குமரி மாவட்டம், இடைக்கோடு இடுவருக்கல்விளை புத்தன்வீடு பகுதியைச் சோ்ந்தவா் ராமன்குட்டி மகன் சதீஷ் (47). இவா் திருவனந்தபுரத்தில் உள்ள மோட்டாா் சைக்கிள்களுக்கான உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடையில் வேலை பாா்த்து வந்தாா். செவ்வாய்க்கிழமை காலையில் கடைக்கு பணிக்கு செல்வதற்காக குழித்துறை மேற்கு ரயில் நிலையத்திலிருந்து திருவனந்தபுரத்துக்கு ரயிலில் சென்று கொண்டிருந்தாராம்.
களியக்காவிளைக்கு அருகே வந்த போது இவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாம். இதையடுத்து பாறசாலை ரயில்வே போலீஸாா் அவரை மீட்டு பாறசாலை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவரை பரிசோதனை மேற்கொண்ட மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா். தொடா்ந்து அரது சடலம் திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இது குறித்து பாறசாலை ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.