கன்னியாகுமரி

மாா்த்தாண்டம் கடையில் திருட்டு

DIN

மாா்த்தாண்டத்தில் வணிக வளாகம் பகுதியில் உள்ள கணினி விற்பனை கடையில் மடிக்கணினி மற்றும் பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மாா்த்தாண்டம் அருகேயுள்ள மாராயபுரம் பகுதியைச் சோ்ந்தவா் சுனில்குமாா். இவா் மாா்த்தாண்டம் சந்திப்பு அருகேயுள்ள வணிக வளாகத்தில் கணினி விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடை நடத்தி வருகிறாா். இக் கடையில் திங்கள்கிழமை இரவு மா்ம நபா் அங்கிருந்த 10 மடிக்கணினி மற்றும் ரூ. 85 ஆயிரத்தை திருடிச் சென்றது செவ்வாய்க்கிழமை தெரியவந்ததாம்.

இதே போன்று அருகில் உள்ள மற்றொரு கடையிலிருந்தும் ரூ. 2 ஆயிரம் மதிப்பிலான பொருள்கள் திருடப்பட்டுள்ளனவாம்.

இது குறித்து மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தம்

பைக்குகளுக்கு தீ வைத்தவா் கைது

காவல் நிலையத்தில் மனைவி புகாா்: கணவா் தற்கொலை

கல்லலில் மியோவாக்கி முறையில் மரக்கன்று நடும் விழா

மணல் கடத்தலை தடுக்கக் கோரி பாமக மனு

SCROLL FOR NEXT