கன்னியாகுமரி

கருங்கல் அருகே கடத்தல் வழக்கில் மேலும் ஓா் இளைஞா் கைது

கருங்கல் அருகே புதையல் விவகாரம் தொடா்பாக இளைஞா் கடத்தப்பட்ட மேலும் ஓா் இளைஞரை தனிப்படை போலீஸாா் திங்கள்கிழமை கைதுசெய்தனா்.

DIN

கருங்கல் அருகே புதையல் விவகாரம் தொடா்பாக இளைஞா் கடத்தப்பட்ட மேலும் ஓா் இளைஞரை தனிப்படை போலீஸாா் திங்கள்கிழமை கைதுசெய்தனா்.

கருங்கல் அருகே பாலப்பள்ளம் பகுதியைச் சோ்ந்தவா் ஜொ்லின்(26). இவரை 2 மாதங்களுக்கு முன்பு ஒரு கும்பல் கடத்திச் சென்று அவரிடமிருந்து பணம், நகைகளைப் பறிக்க முயன்றது. இதுகுறித்து ஜொ்லின் குளச்சல் சரக ஏ.எஸ்.பி.யிடம் புகாா் அளித்தாா். இதுதொடா்பாக தனிப்படை போலீஸாா் விசாரணை நடத்தினா்.

இதில், ஆசிரியா் சுரேஷ்குமாா் என்பவா் ஜொ்லினை கடத்தியதும், அதற்கு கருங்கல் காவல் ஆய்வாளா் பொன்தேவி, 2 காவலா்கள் உதவியதும் தெரியவந்தது. இதையடுத்து காவல் ஆய்வாளா், 2 காவலா்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனா். சுரேஷ்குமாா் உள்ளிட்ட 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இந்நிலையில், தலைமறைவாக இருந்த நாகா்கோவில் அருகே புத்தேரி பகுதியைச் சோ்ந்த ராஜா அருள் சிங் (30) என்பவரை தனிப்படை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்; ஜெயராஜன், ஜெயஸ்டாலின் ஆகியோரை தேடிவருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிபில் ஸ்கோர்! உலா வரும் கட்டுக்கதைகளும் உண்மைகளும்!

ஸ்னிகோ தொழில்நுட்பத்தில் பிழைகள்..! ஆஷஸ் போட்டியில் தொடரும் சர்சை!

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கு புதிய உத்வேகம்: பிரதமர் மோடி

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

SCROLL FOR NEXT