கன்னியாகுமரி

நாகர்கோவிலில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம்

DIN

நாகர்கோவில் கோணத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (பிப். 22) நடைபெறுகிறது. 
நாகர்கோவில் கோணத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலத்தில் காலை 10 மணிக்கு நடைபெறும் இந்த முகாமில் குமரி  மாவட்டம் மட்டுமன்றி  பிற மாவட்ட தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகளும் பங்கேற்று, தங்கள் நிறுவனங்களுக்குத் தேவையான தகுதியுள்ள நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். இதில், பத்தாம் வகுப்பு,  பிளஸ் 2, பட்டப்படிப்பு,  டிப்ளமோ, ஐ.டி.ஐ., ஆசிரியர்கள் மற்றும் கணினி பயிற்சி கல்வித் தகுதியுடைய வேலைநாடுநர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொள்ளலாம்.  இதன் மூலம் வேலைவாய்ப்பு பெறுவோரின் அரசு வேலைவாய்ப்பு அலுவலக பதிவு  ரத்து செய்யப்படமாட்டாது.  மேலும், விவரங்களுக்கு  04652-264191 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம் என மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குநர் மூ. காளிமுத்து தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொல்கத்தா அணியின் உரிமையாளரைப் புகழ்ந்த வருண் சக்கரவர்த்தி; எதற்காக தெரியுமா?

குறைவான தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ்: என்ன காரணம்?

சிறையிலிருந்து வெளியே வந்தார் கேஜரிவால்!

சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்த காலின் முன்ரோ; காரணம் என்ன?

சிஎஸ்கே பந்துவீச்சு; அணியில் மீண்டும் ரச்சின் ரவீந்திரா!

SCROLL FOR NEXT