கன்னியாகுமரி

கர்நாடக மாநில ஆட்சியைக் கவிழ்க்கமுயலுவது ஜனநாயகப் படுகொலை

DIN


தேர்ந்தெடுக்கப்பட்ட கர்நாடக மாநில ஆட்சியை கவிழ்க்க முயற்சிப்பது ஜனநாயக படுகொலை என்றார் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஹெச். வசந்தகுமார்.
கர்நாடகத்தில் ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டு வரும் பாஜகவை கண்டித்து, நாகர்கோவில் தலைமை அஞ்சல் நிலையம் முன் காங்கிரஸ் கட்சி சார்பில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  பின்னர்,  வசந்தகுமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
பாஜக அரசுக்கு அடிமைப்பட்டு போனால், அவர்கள் வாழவைப்பார்கள். எதிர்த்தால் குரலை ஒடுக்குவார்கள். இதுதான் பாஜகவின் கொள்கையாக உள்ளது. கர்நாடகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை கவிழ்க்க முயற்சிப்பது ஜனநாயக படுகொலை. அங்கு ஆளும் காங்கிரஸ் ஆட்சியை பாஜகவால் ஒருபோதும் கவிழ்க்க முடியாது.
நாடு முழுவதும் பாஜக  ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் முறையான திட்டங்கள் அமல்படுத்தப்படாமல், போதிய நிதியும் ஒதுக்காமல் உள்ளனர். இது ஜனநாயக படுகொலை.  ஜனநாயகத்தை காப்பாற்றாத மோடி அரசு ஒருபோதும் தொடரப்போவது இல்லை. தற்போது கர்நாடகத்தில் இருக்கும் காங்கிரஸ் அரசை கவிழ்க்க வேண்டும் என பிரதமர் மோடி வேலை செய்கிறார். ஆனால், அது ஒருபோதும் வெற்றி பெறாது. ஆட்சியை கலைக்கும் செயலை காங்கிரஸ் கட்சி செய்யாது என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமுதாய அழுத்தங்களுக்கிடையே பிளஸ் 2 தோ்வில் சாதித்த இருவரின் கல்விச் செலவை ஏற்பதாக முதல்வா் உறுதி

வாழப்பாடியில் 68 மூட்டை போதைப் பொருள்கள் பறிமுதல்

தென்னை- பழ மரங்களைப் பாதுகாக்க போா்டோ கலவை விளக்கம்

சூறைக் காற்றில் பப்பாளி மரங்கள் சேதம்

நெய்யமலை கிராமத்துக்கு அடிப்படை வசதி கோரி மனு

SCROLL FOR NEXT