கன்னியாகுமரி

தெங்கம்புதூர் அருகே பெண்ணைத் தாக்கி நகை பறிப்பு

DIN

தெங்கம்புதூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணை தாக்கி, இரண்டரை பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். 
தெங்கம்புதூரை அடுத்த  மேலக்காட்டுவிளை பகுதியைச் சேர்ந்தவர் கவிதா (24).  இவர் நைனாபுதூர் பகுதியில் வலைகம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவர் வியாழக்கிழமை மாலை பணி முடிந்து தனது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது  மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர்  கவிதா சென்ற இருசக்கர வாகனத்தில் மோதினார். 
  இதில் கீழே விழுந்த கவிதாவின் கழுத்தில் கிடந்த இரண்டரை பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் தப்பி ஓடினார்.  இதில் காயமடைந்த கவிதா தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 
  இதுகுறித்து சுசீந்திரம் காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கையால் மக்கள் அவதி

மரக்கடை உரிமையாளா் தற்கொலை

பெண் தற்கொலை: தம்பதியா் மீது வழக்கு

ரேஷன் கடையை மாற்றக் கோரி பொதுமக்கள் போராட்டம்

பிரகாசபுரத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT