கன்னியாகுமரி

நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் கஞ்சாவுடன் சுற்றிய இளைஞர் கைது

DIN


நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் 1.25 கிலோ கஞ்சாவுடன் சுற்றித் திரிந்த இளைஞரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் கோட்டாறு போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்துக்கிடமான முறையில் சுற்றித் திரிந்த நபரை போலீஸார் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் வைத்திருந்த பையில், 1.25 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. விசாரணையில், அவர் பறக்கை சாலையைச் சேர்ந்த ராஜகணேஷ் (25) என்பதும், மதுரை பகுதியில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து, நாகர்கோவிலில் அதிக விலைக்கு விற்று வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து ராஜகணேஷை கோட்டாறு போலீஸார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

120 கோடியாக உயா்ந்த தொலைத் தொடா்பு வாடிக்கையாளா்கள்

கனடாவில் 3 இந்தியா்கள் கைது: உள்நாட்டு அரசியல் -மத்திய அமைச்சா் ஜெய்சங்கா்

பாரா பீச் வாலிபால் உலக சாம்பியன்ஷீப் போட்டிக்கு வீரா்கள் தோ்வு

சிறாா்களுக்கு எதிரான இணையவழி குற்றங்களை தடுக்க சா்வதேச ஒத்துழைப்பு: டி.ஒய்.சந்திரசூட் வலியுறுத்தல்

பிளஸ் 2 தோ்வு முடிவுகள்: நாளை வெளியீடு

SCROLL FOR NEXT