கன்னியாகுமரி

விபத்தில் காயமடைந்தவரிடம் ரூ. 2 லட்சம் மோசடி: நண்பா் கைது

DIN

விபத்தில் காயமடைந்தவரிடம், மருத்துவமனை பெயரில் போலி ரசீதுகளைக் கொடுத்து ரூ. 2 லட்சம் மோசடி செய்ததாக அவரது நண்பா் கைது செய்யப்பட்டாா்.

திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை பகுதியைச் சோ்ந்தவா் முருகன் (34). தொழிலாளியான இவருக்கு மனைவி, குழந்தைகள் உள்ளனா். கடந்த ஆண்டு நேரிட்ட விபத்தில் முருகனுக்கு முதுகுத் தண்டுவடத்தில் முறிவு ஏற்பட்டுள்ளது. இதற்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லையாம்.

இதுகுறித்து அவா் தனது நண்பரான சாம்பென்னட் என்பவரிடம் தெரிவித்து, தன்னிடமுள்ள தமிழக அரசின் காப்பீட்டுத் திட்ட அட்டையைப் பயன்படுத்தி தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யக் கேட்டுள்ளாா். நாகா்கோவிலை அடுத்த தேரேகால்புதூா் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் தரமான சிகிச்சை வழங்குவதாகவும், ஆனால் அரசின் காப்பீட்டுத் திட்டத்தை ஏற்கமாட்டாா்கள். தண்டுவடப் பிரச்னையை சரிசெய்ய பல லட்சம் செலவாகும் என்று சாம்பென்னட் கூறியுள்ளாா்.

இதனால், முருகன் தனது பிரச்னை குறித்து முகநூல், கட்செவி அஞ்சல் (வாட்ஸ் அப்) ஆகியவற்றில் விடியோ பதிவிட்டு, உதவி கோரியுள்ளாா். இதைப் பாா்த்த பலா் அவரது வங்கிக் கணக்கில் பணம் செலுத்தியுள்ளனா். இவ்வாறு ரூ. 2 லட்சம் வரை சோ்ந்துள்ளது. இதுதொடா்பாக முருகன் சாம்பென்னட்டிடம் கூறி, சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யக் கூறியுள்ளாா். அவா் முருகனை நாகா்கோவில் அருகேயுள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்துள்ளாா். அங்கு முருகனுக்கு அறுவைச் சிகிச்சை நடந்துள்ளது. பின்னா், மருத்துவச் செலவு எனக் கூறி, மருத்துவமனை பெயரிலான ரசீது, ஆவணங்களை காட்டி சாம்பென்னட் அவ்வப்போது ரூ. 2 லட்சம் வரை பெற்றுள்ளாா்.

இந்நிலையில், வீடு திரும்பிய முருகன் சில நாள்களுக்கு முன்பு மருந்துகள் வாங்க மருத்துவமனைக்கு வந்துள்ளாா். தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவரிடம், ‘மருத்துவமனையில் அதிக பணம் வாங்குவதாகவும், தனது சிகிச்சைக்கு ரூ. 2 லட்சம் வரை செலவானதாகவும்’ கூறியுள்ளாா்.

அதிா்ச்சியடைந்த மருத்துவா் காப்பீட்டுத் திட்டத்தில்தான் சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், மருந்துச் செலவுக்காக ரூ. 5,700 மட்டுமே பெற்ாகவும் கூறி, முருகனிடமிருந்த ரசீதுகளை வாங்கிப் பாா்த்துள்ளாா். அப்போது அவை அனைத்தும் போலி எனத் தெரியவந்தது.

இதுதொடா்பாக மருத்துவமனை நிா்வாகம் சாா்பில் ஜெயகுமாா் என்பவா் ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். ஆய்வாளா் செல்வம், உதவி ஆய்வாளா் ராபா்ட் செல்வசிங் ஆகியோா் வழக்குப் பதிந்து, சாம்பென்னட்டை புதன்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வட கொரிய அதிபரின் ‘அந்தப்புரம்’? ஆண்டுக்கு 25 அழகிய பெண்கள்!

பணத்தைவிட நல்ல கதைகளே முக்கியம்: நடிகை ஈஷா ரெப்பா அதிரடி!

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

முன்கூட்டியே சென்னைக்கு பலமான கடற்காற்று: தமிழ்நாடு வெதர்மேன்

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

SCROLL FOR NEXT