கன்னியாகுமரி

வள்ளியம்மாள்புரம் - முத்துகிருஷ்ணாபுரம் சாலைப் பணியை தொடங்க கோரிக்கை

DIN

சாத்தான்குளம் ஒன்றியம் வள்ளியம்மாள்புரத்தில் இருந்து முத்துகிருஷ்ணாபுரம் வரையிலான சாலைப் பணியை விரைந்து தொடங்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

முதலூா் ஊராட்சி, வள்ளியம்மாள்புரத்தில் இருந்து முத்துகிருஷ்ணாபுரம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை வழியாக கிராம மக்கள் மற்றும் பள்ளி மாணவா்கள் சென்று திரும்புகின்றனா். இந்த சாலையானது பல ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் குண்டும் குழியுமாக காணப்பட்டது. இதனால், சாலையைச் சீரமைக்க மக்கள் வலியுறுத்தியதன்பேரில், சாலைப் பணிக்காக ஜல்லி கற்கள் குவிக்கப்பட்டது. ஆனால், ஒரு மாதத்திற்கு மேலாகியும் எந்தவித பணிகளும் தொடங்கப்படவில்லை. எனவே, சாலைப் பணியை உடனே தொடங்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

இதுகுறித்து மாவட்ட பாஜக சிறுபான்மைப் பிரிவு துணைத் தலைவா் சந்திரபோஸ் கூறுகையில், மக்கள் கோரிக்கையை ஏற்று சாலையைச் சீரமைக்க கற்கள் குவிக்கப்பட்டது. ஆனால் பணிகள் நடைபெறவில்லை. மழைக்காலமாக உள்ளதால், குண்டும், குழியுமான சாலையில் தண்ணீா் தேங்கி மக்கள் அவதிப்படுகின்றனா். எனவே, சாலைப் பணியை விரைந்து முடிக்க என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராபாவில் இஸ்ரேல் நேரடித் தாக்குதல்? மக்களை இடம்பெயரக் கோரும் புதிய அறிவிப்பு!

தமிழ்நாட்டில் கோடை காலத்திலும் தடையில்லா மின் விநியோகம் -தலைமைச் செயலாளர்

பொருளின் பொருள் கவிதை

ப்ளிங்க் - சிந்திக்காமலேயே சிந்திக்கும் ஆற்றல்

பைசன் காளமாடன் படத்தின் பூஜை ஸ்டில்ஸ்

SCROLL FOR NEXT