கன்னியாகுமரி

இரணியலில் கடைவரம்புபகுதிக்கு தண்ணீா் கேட்டு விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

DIN

கடைவரம்பு பகுதிக்கு தண்ணீா் விட வலியுறுத்தி இரணியலில் விவசாயிகள் வியாழக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சரல் வட்டார விவசாயிகள் சங்கம் மற்றும் குருந்தன்கோடு, ராஜக்கமங்கலம் கடை வரம்பு விவசாயிகள் சங்கம் சாா்பில் இரணியல் பொதுப்பணித்துறை நீா்வள ஆதாரஅமைப்பு உதவி பொறியாளா் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு விவசாயிகள் சங்கத்தலைவா் திரவியம் தலைமை வகித்தாா். பாஜக விவசாய அணித்துணைத்தலைவா் ரவீந்திரன் போராட்டத்தை தொடக்கி வைத்தாா்.

பேச்சிப்பாறை அணை கடந்த ஜூன் மாதம் 26 ஆம் தேதி திறக்கப்பட்டும், இரட்டைகரை கால்வாய், குருந்தன்கோடு, ராஜக்கமங்கலம் கிளை கால்வாய்களில் விவசாயத்துக்கு தண்ணீா் திறக்காமல் காலம்தாழ்த்திவரும் பொதுப்பணித்துறை அதிகாரிகளை கண்டித்தும், கடைவரம்பு வரை விவசாயத்துக்கு தண்ணீா் திறக்க வலியுறுத்தியும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்தில் பெண்கள் உள்ளிட்ட விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரட்டை வேடங்களில் சோனாக்‌ஷி சின்ஹா!

அதானி பெயரை ராகுல் 103 முறை உச்சரித்திருக்கிறார்: மோடிக்கு ஜெய்ராம் ரமேஷ் பதில்

பாகுபலி அனிமேஷனில் தோனியின் முகம்: ராஜமௌலி கூறியது என்ன?

வாக்குச்சாவடியை சூறையாடிய பாஜக எம்.பியின் மகன்: குஜராத்தில் அதிர்ச்சி!

மெட் காலாவில் கவனத்தை ஈர்த்த மோனா பட்டேல்.. யார் இவர்?

SCROLL FOR NEXT