நாகர்கோவிலில் புதன்கிழமை அதிகாலை நேரிட்ட விபத்தில் இளைஞர் உயிரிழந்தார்.
நாகர்கோவிலில் உள்ள சகோதரர் தெருவைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் ஆனந்த் (24). செல்லிடப்பேசி பழுதுநீக்கும் வேலை பார்த்துவந்தார். செவ்வாய்க்கிழமை இரவு தன் நண்பர் வீட்டுக்குச் சென்ற இவர், நேரமாகிவிட்டதால் அங்கேயே தங்கிவிட்டாராம். புதன்கிழமை அதிகாலை இவர் தனது பைக்கில் நாகர்கோவிலுக்கு வந்து கொண்டிருந்தார். இந்துக் கல்லூரி அருகே, அடையாளம் தெரியாத வாகனம் ஆனந்தின் பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றதாகக் கூறப்படுகிறது.இதில், காயமடைந்த அவரை அப்பகுதியினர் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் உயிரிழந்தார். நாகர்கோவில் போக்குவரத்து போலீஸார் வழக்குப் பதிந்து, விபத்துக்குக் காரணமான வாகனம் குறித்து அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.