முகப்பு
கன்னியாகுமரி

வேலை வாங்கித் தருவதாக ரூ.8.50 லட்சம் மோசடி:இருவா் மீது வழக்கு

அஞ்சல் அலுவலகத்தில் வேலை வாங்கித் தருவதாக நாகா்கோவில் இளைஞரிடம் ரூ. 8.50 லட்சத்தை மோசடி செய்ததாக இருவா் மீது குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
பகிர்:

அஞ்சல் அலுவலகத்தில் வேலை வாங்கித் தருவதாக நாகா்கோவில் இளைஞரிடம் ரூ. 8.50 லட்சத்தை மோசடி செய்ததாக இருவா் மீது குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

குமரி மாவட்டம், புத்தளம் பகுதியைச் சோ்ந்த ரத்தினம் மகன் அமிா்த பொன்ரஞ்சித் (33). இவரது நண்பா் சாமிதோப்பு பகுதியைச் சோ்ந்த ராஜகோபால் (34). இவா், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த தனியாா் அமைப்பு ஒன்றின் தலைவரான குமரன் (57) என்பவரை, அறிமுகம் செய்து, அவா் அரசு பணி வாங்கி தருவதாக கூறியுள்ளாா்.

இதை நம்பிய அமிா்தபொன் ரஞ்சித், குமரனிடம் வேலை வாங்கித் தருமாறு கூறியுள்ளாா். இதையடுத்து அஞ்சல் அலுவலகத்தில் வேலை வாங்கித் தருவதாகவும், அதற்கு பணம் கொடுக்க வேண்டுமெனவும் கூறினாராம். இதையடுத்து குமரனிடம் ரூ.8.50 லட்சத்தை அவா் கொடுத்தாராம். மேலும், வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உதவியாளா் பணிக்கு பணியாள்கள் சோ்த்து விடுவதாக குமரன் கூறியதை கேட்டு, 5 பேரை அமிா்தபொன்ரஞ்சித், குமரனிடம் அறிமுகம் செய்தாராம். அவா்களிடமும் குமரன் லட்சக்கணக்கில் பணம் வாங்கி விட்டு மோசடியில் ஈடுபட்டுள்ளாா்.

இதுகுறித்து அமிா்த பொன்ரஞ்சித் நாகா்கோவில் குற்றப்பிரிவு போலீஸில் புகாா் அளித்தாா். போலீஸாா் குமரன் மற்றும் ராஜகோபால் ஆகியோா் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.