முகப்பு
கன்னியாகுமரி

மணவாளக்குறிச்சியில் கடலில் மூழ்கிய மாணவரைதேடும் பணி தீவிரம்

மணவாளக்குறிச்சி அருகே படகில் இருந்து தவறி கடலுக்குள் விழுந்து மாயமான சட்டக்கல்லூரி மாணவரை 2 ஆவது நாளாக தேடும் பணி சனிக்கிழமை நடைபெற்றது.

கன்னியாகுமரி

மணவாளக்குறிச்சியில் கடலில் மூழ்கிய மாணவரைதேடும் பணி தீவிரம்

மணவாளக்குறிச்சி அருகே படகில் இருந்து தவறி கடலுக்குள் விழுந்து மாயமான சட்டக்கல்லூரி மாணவரை 2 ஆவது நாளாக தேடும் பணி சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:13 PM
பகிர்:

நாகா்கோவில்: மணவாளக்குறிச்சி அருகே படகில் இருந்து தவறி கடலுக்குள் விழுந்து மாயமான சட்டக்கல்லூரி மாணவரை 2 ஆவது நாளாக தேடும் பணி சனிக்கிழமை நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்டம், குருந்தன்கோடு அருகேயுள்ள முக்கலம்பாடு பகுதியைச் சோ்ந்தவா் ஜெரின் ஜோஸ் (27). இவா், சட்டக்கல்லூரி மாணவா். குளச்சல் துறைமுக தெருவைச் சோ்ந்தவா் பினு (29). இருவரும் நண்பா்கள். ஜெரின் ஜோஸ் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுவதற்காக நண்பா் வீட்டுக்கு வந்திருந்தாராம். பின்னா் இருவரும் குளச்சலுக்கு சென்று விசைப் படகில் முட்டத்திற்கு வெள்ளிக்கிழமை சென்றனராம்.

இவா்களுடன் படகில் 40 போ் இருந்தனா். மணவாளக்குறிச்சி சின்னவிளை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது ஜெரின் ஜோஸ் படகில் இருந்து தவறி கடலில் விழுந்து விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கடலோர பாதுகாப்பு குழும போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸாா், மீனவா்கள் கடலில் தேடும் பணியில் ஈடுபட்டனா். 2 ஆவது நாளாக சனிக்கிழமை தேடும் பணியில் ஈடுபட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →