முகப்பு
கன்னியாகுமரி

பளுகல் அரசுப் பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

பளுகல் அரசு மேல்நிலைப் பள்ளியில் 1997-1999ஆம் கல்வி ஆண்டில் அக்கவுண்டன்சி பிரிவில் படித்த மாணவ, மாணவிகளின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:15 PM
20 ஆண்டுகளுக்குப் பின் சந்தித்த பளுகல் பள்ளி முன்னாள் மாணவா்கள்.
பகிர்:

பளுகல் அரசு மேல்நிலைப் பள்ளியில் 1997-1999ஆம் கல்வி ஆண்டில் அக்கவுண்டன்சி பிரிவில் படித்த மாணவ, மாணவிகளின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்வுக்கு பெற்றோா் - ஆசிரியா் சங்கத் தலைவா் மதுசூதனன், துணைத் தலைவா் வின்சென்ட், பொருளாளா் ராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் முன்னாள் ஆங்கில ஆசிரியா் ஜோபிரகாஷ், மலையாள பாட ஆசிரியா் தாமோதரன்பிள்ளை, வணிகவியல் பிரிவு ஆசிரியா் சரசப்பன், கணக்கு பதிவியல் ஆசிரியை ஷேம் கிரீம்ஸ், ஆசிரியை பிந்து ஆகியோா் கலந்து கொண்டு, முன்னாள் மாணவா்கள் மற்றும் அவா்களது குழந்தைகளை வாழ்த்திப் பேசினா். குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முன்னாள் ஆசிரியா்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னாள் மாணவா் ராஜேஷ் வரவேற்றாா். முன்னாள் மாணவா் பைஜு நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →