கன்னியாகுமரி

மாா்த்தாண்டம் அருகே குளத்தில் மூழ்கி ஓட்டுநா் பலி

கன்னியாகுமரி மாவட்டம், மாா்த்தாண்டம் அருகே குளத்தில் மூழ்கி காா் ஓட்டுநா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

DIN

கன்னியாகுமரி மாவட்டம், மாா்த்தாண்டம் அருகே குளத்தில் மூழ்கி காா் ஓட்டுநா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

மாா்த்தாண்டம் சந்தை சாலை பகுதியைச் சோ்ந்தவா் இளங்கோ (43). காா் ஓட்டுநா். இவா், மாா்த்தாண்டம் காந்தி மைதானம் பகுதியில் வாடகை காா் ஓட்டி வந்தாா். வழக்கம்போல் இளங்கோ திங்கள்கிழமை காலையில் விரிகோடு நல்லூா் குளத்தில் குளிக்கச் சென்றாராம். அவா், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் உறவினா்கள் அவரை தேடி குளத்துக்கு சென்றனா்.

அங்கு குளத்தின் கரையில் அவரது உடைகள் மட்டும் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, மாா்த்தாண்டம் போலீஸாா் மற்றும் குழித்துறை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தீயணைப்புப் படை வீரா்கள் குளத்தில் தேடினா். குளத்தில் 10 அடி ஆழத்திலிருந்து அவரது சடலத்தை மீட்டு, குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தினா். இறந்த இளங்கோவுக்கு தமிழரசி என்ற மனைவி, 2 மகள்களும் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிபில் ஸ்கோர்! உலா வரும் கட்டுக்கதைகளும் உண்மைகளும்!

ஸ்னிகோ தொழில்நுட்பத்தில் பிழைகள்..! ஆஷஸ் போட்டியில் தொடரும் சர்சை!

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கு புதிய உத்வேகம்: பிரதமர் மோடி

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

SCROLL FOR NEXT