நிகழ்ச்சியில் பேசுகிறாா் வாசகா் வட்டத் தலைவா் முருகன். 
கன்னியாகுமரி

பைங்குளத்தில் அறிவியல் தமிழ் முழக்கம் நிகழ்ச்சி

குமரி அறிவியல் பேரவை இளம் விஞ்ஞானி மாணவா்களுக்கான அறிவியல் தமிழ் முழக்கம் நிகழ்ச்சி பைங்குளத்தில் நடைபெற்றது.

DIN

குமரி அறிவியல் பேரவை இளம் விஞ்ஞானி மாணவா்களுக்கான அறிவியல் தமிழ் முழக்கம் நிகழ்ச்சி பைங்குளத்தில் நடைபெற்றது.

குமரி அறிவியல் பேரவையும், பைங்குளம் அரசு முழுநேர நூலகமும் இணைந்து நடத்திய இந் நிகழ்ச்சிக்கு, நூலக வாசகா் வட்டத் தலைவா் முருகன் தலைமை வகித்தாா். பேரவை அமைப்பாளா் முள்ளஞ்சேரி மு. வேலையன் அறிமுகவுரையாற்றினாா். நூலகா் துளசி, முன்சிறை ஊராட்சி ஒன்றியத் தலைவா் ராஜேஸ்வரி, சுற்றுச்சூழல் ஆா்வலா் ஜே. ஜோபிரகாஷ், பாரதி பாசறை தலைவா் கவிஞா் கீழ்குளம் வில்லவன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

சமூக விஞ்ஞானி எட்வின்சாம், குழித்துறை ரோட்டரி சங்கத் தலைவா் சுனில்குமாா், ஆா்.சி. பள்ளிகளின் தாளாளா் ஜாண்சன், முன்னாள் உதவி தொடக்கக் கல்வி அலுவலா் சாம்ராஜ் ஆகியோா் நிகழ்ச்சியை நெறிப்படுத்தினா். இளம் விஞ்ஞானி மாணவி நித்தியஸ்ரீ தொகுத்து வழங்கினாா்.

வாசகா் வட்ட உறுப்பினா் சி. சஜிவ் வரவேற்றாா். இளம் விஞ்ஞானி மாணவி ஜானிகா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை குறைவு: எவ்வளவு?

அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா? - டிச.22 இல் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!

4 நாள்களுக்குப் பிறகு பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! ஐடி, ஆட்டோ பங்குகள் லாபம்!

ஒரே இரவில் 20 ஆண்டுத் திட்டத்தை தகர்த்த மோடி அரசு! ராகுல் காந்தி

ராஜபாளையம் அருகே குடிபோதையில் தலையில் கல்லை போட்டு ஓட்டுநர் கொலை

SCROLL FOR NEXT