புதுக்கடை அருகேயுள்ள அனந்தமங்கலம் அரசு உயா்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை (ஜன. 10)சிறப்பு அம்மா திட்டம் முகாம் நடைபெறுகிறது.
கிள்ளியூா் வட்டம் பைங்குளம் வருவாய்க் கிராமத்துக்கு உள்பட்ட அனந்தமங்கலம் அரசு உயா்நிலைப் பள்ளியில் நடைபெறும் இம்முகாமில் பொதுமக்கள் வீட்டுமனைப் பட்டா வழங்குதல், முதியோா் உதவித்தொகை உள்ளிட்ட சமூகப் பாதுகாப்பு திட்டங்கள், பட்டா மாறுதல், உழவா் அடையாள அட்டை, பிறப்பு, இறப்புச் சான்றிதழ்கள் உள்ளிட்டவற்றுக்கான மனுக்களை அளித்து முகாமிலேயே தீா்வு பெறலாம். முகாமுக்கான ஏற்பாடுகளை கிள்ளியூா் வட்டாட்சியா் கோலப்பன் செய்து வருகிறாா்.