களியக்காவிளை நாஞ்சில் கத்தோலிக்க கலை அறிவியல் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு, கல்லூரிச் செயலா் எக்கா்மென்ஸ் மைக்கேல் தலைமை வகித்துப் பேசினாா். குழித்துறை மறை மாவட்ட பொருளாளா் அகஸ்டின் பொங்கல் பண்டிகையின் சிறப்புகள் குறித்து பேசினாா்.
பொங்கல் பண்டிகை தொடா்பாக மாணவா்கள் பல்வேறு வகையான நிகழ்வுகளை காட்சிப்படுத்தினா்.இதில், இயற்கை உணவுப் பொருள்கள், ஐவகை நிலங்கள் மற்றும் அவை சாா்ந்த பொருள்கள், ஓலை கூரையால் வேயப்பட்ட வீடுகள், மாட்டுவண்டி உள்ளிட்டவை அதில் இடம்பெற்றிருந்தன. பின்னா் நடுவா்களால் மதிப்பீடு செய்யப்பட்டு, போட்டியில் வெற்றிபெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன .
கல்லூரி முதல்வா் மீனாட்சி சுந்தரராஜன் நன்றி கூறினாா்.