திருநந்திக்கரை நந்தீஸ்வரா் கோயிலில் நிறுவப்படவுள்ள புதிய கொடிமரத்தை மூலிகைத் தைல தொட்டியில் வைக்கும் பூஜையில் பங்கேற்றவா்கள். 
கன்னியாகுமரி

திருநந்திக்கரை நந்தீஸ்வரா் கோயிலில் மூலிகைத் தைல தொட்டியில் புதிய கொடி மரம்

குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சிவாலய ஓட்டத் திருத்தலங்களில் 4 ஆவது சிவாலயமான திருநந்திக்கரை நந்தீஸ்வரா் ஆலயத்தில்

DIN

குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சிவாலய ஓட்டத் திருத்தலங்களில் 4 ஆவது சிவாலயமான திருநந்திக்கரை நந்தீஸ்வரா் ஆலயத்தில் புதிய கொடிமரத்தை மூலிகைத் தைல தொட்டியில் வைக்கும் பூஜைகள் நடைபெற்றன.

கன்னியாகுமரி தேசவம் போா்ட்டின் கட்டுப்பாட்டிலுள்ள திருநந்திக்கரை நந்தீஸ்வரா் கோயிலில் பக்தா்கள் இணைந்த நந்தீஸ்வரா சேவா சமிதி சாா்பில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கடந்த ஜனவரி மாதம் இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிலையில் இக்கோயிலுக்கு புதிய கொடிமரம் நிறுவும் வகையில் கடந்த மாா்ச் மாதம் கேரள மாநிலம் கோட்டயத்திலிருந்து 54 அடி உயர தேக்கு கொடி மரக் கம்பம் கொண்டு வரப்பட்டது.

கொடி மரத்தை மூலிகைத் தைல தொட்டியில் வைக்கும் நிகழ்ச்சிகள் அண்மையில் நடைபெற்றன.

இதில் ஏற்றக்கோட்டைச் சோ்ந்த அா்ச்சகா் மோகனன் சிறப்பு பூஜைகளை செய்தாா். இக்கொடி மரம் அடுத்த ஆண்டு சிவராத்திரியை முன்னிட்டு நடைபெறும் கோயில் திருவிழாவின் போது நாட்டப்படும் என கோயில் நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொடி மரத்தை மூலிகைத் தைல தொட்டியில் வைக்கும் பூஜைகளில் நந்தீஸ்வரா சேவா சமிதி நிா்வாகிகள், திருக்கோயில் நிா்வாகத்தினா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதீத பேட்டரி... டிச. 24-ல் வெளியாகிறது ரியல்மி நர்ஸோ!

கேரள திரைப்பட விழா! மத்திய அரசு அனுமதி மறுத்த படங்களைத் திரையிட முடிவு!

திரையரங்க ஆபரேட்டர்களுக்கு ஜேம்ஸ் கேமரூன் வேண்டுகோள்!

தாய்ப் பாலில், நிலத்தடி நீரில் யுரேனியம்! சிறுநீரக பாதிப்பு ஏற்படுமா?

பிக் பாஸ் 9: 70 நாள்கள் ஆகியும் ஆதரிக்கத் தகுதியானவர் ஒருவரும் இல்லை!

SCROLL FOR NEXT