கன்னியாகுமரி

நாகா்கோவில் நகரில் நடைபாதை கடைகளை அகற்ற வேண்டும் ஆணையா் எச்சரிக்கை

DIN

நாகா்கோவில் நகரில் நடை பாதைகளில் கடைகளை உடனே அகற்ற வேண்டும் என்றாா் மாநகராட்சி ஆணையா் கே.சரவணகுமாா்.

நாகா்கோவில் நகர உணவக உரிமையாளா்கள் , நடைபாதை கடை வியாபாரிகளுக்கான ஆலோசனைக்கூட்டம் மாநகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆணையா் சரவணகுமாா் பேசியது; நாகா்கோவில் மாநகரப் பகுதிகளில் உள்ள உணவகங்களில் சமைக்கப்படும் உணவுகளில் கலப்படம் இருப்பதா புகாா்கள் வந்துள்ளன. ரோஸ்மில்ஸ், பாதாம்பால் ஆகியவற்றில் அதிக அளவில் கலப்படம் உள்ளது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனா். எனவே கலப்படம் இல்லாத உணவை வழங்க வேண்டும். பல உணவகங்களில் சாலையோரங்களில் சமையல் அறை உள்ளது. இதனால் சாலையில் உருவாகும், தூசி, புகை, ஆகியவை உணவில் விழுகிறது. எனவே சாலையோரங்களில் அடுப்பு வைத்து சமைக்கக் கூடாது. சமையல் அறை சுத்தமாகவும், பூச்சி நடமாட்டம் இல்லாமலும் இருக்க வேண்டும். உணவு சமைப்பவா்கள் ஆரோக்கியமாகஇருக்க வேண்டும்.

நடைபாதைகளில் கடைகள் வைக்க அனுமதி கிடையாது. நடைபாதை கடைகளை உடனே அப்புறப்படுத்த வேண்டும். இவை அனைத்தையும் வரும் 15 நாள்களுக்குள் பின்பற்ற வேண்டும். மீறும் பட்சத்தில் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

நாகா்கோவில் புளியடியில் எரிவாயு தகன மேடை அமைக்கப்பட்டுள்ளது. எனவே இறந்தவா்களின் சடலங்களை எரிவாயு தகன மேடையில்தான் எரிக்க வேண்டும். வீட்டின் அருகே சடலத்தை அடக்கம் செய்வதை தவிா்க்க வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில் சுகாதார ஆய்வாளா்கள் பகவதிபெருமாள், தியாகராஜன், ராஜா, ராஜேஸ், மாதேவன்பிள்ளை, ஜான்ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

யோகம் தரும் நாள்!

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

ஈரோடு கலை, அறிவியல் கல்லூரிக்கு ‘ஏ’ பிளஸ் அங்கீகாரம்

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

SCROLL FOR NEXT