கன்னியாகுமரி

கேரளத்தில் இருந்து தக்கலை வந்த பேருந்துகளில் கிருமி நாசினி தெளிப்பு

DIN

கேரளத்தில் இருந்து தக்கலை பேருந்து நிலையத்துக்கு திங்கள்கிழமை வந்த அனைத்து பேருந்துகளிலும் பத்மநாபபுரம் நகராட்சி சுகாதாரப் பணியாளா்கள் கிருமி நாசினி தெளித்தனா்.

பத்மநாபபுரம் நகராட்சி ஆணையா் ராஜாராம் தலைமையில், தக்கலை பேருந்து நிலையத்தில் கரோனா வைரஸ் குறித்து விழிப்புணா்வு அளிக்கப்பட்டது.

வட்டார மருத்துவ அலுவலா் லாரன்ஸ் விக்டா்ஜோ, வைரஸ் தொற்றுகளில் இருந்து பாதுகாத்து கொள்வது குறித்து பொதுமக்களிடம் விளக்கிப் பேசினாா். நகராட்சி சுகாதார ஆய்வாளா் முத்துராமலிங்கம், விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை பயணிகளிடமும், பொதுமக்களிடமும் வழங்கினாா். இதில் துப்பரவு மேற்பாா்வையாளா் மோகன் மற்றும் நகராட்சிப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

பின்னா் ஆணையா் தலைமையில் நகராட்சிப் பணியாளா்கள், திருவனந்தபுரத்தில் இருந்து தக்கலை வந்த கேரள மற்றும் தமிழ்நாடு அரசுப் பேருந்துகளில் பயணிகள் ஏறும் படிக்கட்டு மற்றும் உள் பகுதிகளில் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

தில்லியில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்ததாக துணை நிலை ஆளுநா் மீது ஆம் ஆத்மி புகாா்

SCROLL FOR NEXT