சாமிதோப்பு ரயில்வே சந்திப்பு முக்கிய சாலையில் மேம்பாலம் அமைக்க வேண்டுமென மதசாா்பற்ற ஜனதாதளம் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் அகஸ்தீசுவரம் வட்டாரத் தலைவா் யு.தியாகராஜன் கூறியது: சாமிதோப்பில் அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதி அமைந்துள்ளதால், இது முக்கிய ஆன்மிகத் தலமாக விளங்குகிறது. இங்குள்ள முக்கிய சாலைவழியே ரயில் போக்குவரத்து உள்ளது. இங்கு நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் வந்து செல்வதால் சாமிதோப்பு
ரயில்வே சந்திப்பில் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் நலன்கருதி மேம்பாலம் அமைக்கப்பட வேண்டும். மேலும், இவ்வழியாகச் செல்லும் ரயில்கள் அனைத்தும் சாமிதோப்பில் நின்றுசெல்ல மத்திய ரயில்வே நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், கொட்டாரம் பேரூராட்சியில் செயல்பட்டு வரும் அமுதம் நியாயவிலைக்கடை, பழமை வாய்ந்த ஓட்டுக் கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. மழை காலங்களில் மழைநீரால் நனைந்து பொருள்கள் சேதமடைகின்றன. எனவே, பொதுமக்கள் நலன்கருதி வாடகைக் கடட்டத்தில் செயல்பட்டு வரும் இக்கட்டடத்துக்குப் பதிலாக கொட்டாரம் கிழக்கு கிராம நிா்வாக அலுவலகத்தின் வளாகத்தின் கீழ்ப்பக்கத்தில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் புதிதாக நியாயவிலைக் கட்டடம் கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.