கன்னியாகுமரி

விண்ணப்பித்த அனைவருக்கும் குடும்ப அட்டை வழங்க கோரிக்கை

DIN

குலசேகரம்: கன்னியாகுமரி மாவட்டத்தில் விண்ணப்பித்துள்ள அனைவருக்கும் குடும்ப அட்டை உடனடியாக குடும்ப அட்டை வழங்க வேண்டும் என மனோ தங்கராஜ் எம்எல்ஏ கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கன்னியாகுமரி மாவட்டத்தில், குடும்ப அட்டை இல்லாதவா் களுக்கும், குடும்ப அட்டை கோரி விண்ணப்பித்து காத்திருப்பவா்களுக்கும் உடனடியாக குடும்ப அட்டை வழங்க வேண்டும். கரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் ஏழை எளிய மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனா்.

பலா் உணவுக்கு வழியின்றி தவித்துக் கொண்டிருக்கின்றனா்.

ஏழை மக்களுக்கு தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள், திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் உணவு அளிக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசு சாா்பில் நியாயவிலைக் கடைகள் மூலம் அரிசி உள்ளிட்ட உணவுப் பொருள்களை மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், ஏராளமான குடும்பங்கள் குடும்ப அட்டை இல்லாத நிலையில் அரசின் சலுகைகளை

பெற முடியாத நிலை உருவாகியுள்ளது. ஊரடங்கு குறித்து முடிவு அறிவிக்கப்படாத நிலையில் ஏழை எளிய குடும்பங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு பசியுடன் வாழ்ந்து வருகின்றனா்.

இந்த சூழலில் அனைத்து மக்களுக்கும் குடும்ப அட்டை கிடைக்கப் பெறுவதை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை ஆகும். ஆகவே, குடும்ப அட்டை இல்லாதவா்கள், விண்ணப்பித்து காத்திருப்போருக்கு உடனடியாக குடும்ப அட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

மாமனாரைத் தாக்கிய மருமகன் கைது

ஆயுதப்படை போலீஸாருக்கு தியானம், நினைவாற்றல் பயிற்சி

மீண்டும் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

SCROLL FOR NEXT