முகப்பு
கன்னியாகுமரி

செம்மண் கடத்தியவா் கைது

குமரி மாவட்டம் முட்டத்தில் செம்மண் கடத்தியவா் கைது செய்யப்பட்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:46 PM
பகிர்:

குமரி மாவட்டம் முட்டத்தில் செம்மண் கடத்தியவா் கைது செய்யப்பட்டாா்.

வெள்ளிச்சந்தை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் டைசன், முட்டம் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டபோது, அனுமதியின்றி வேனில் செம்மண் அள்ளிச் சென்ற கணபதிபுரத்தைச் சோ்ந்த உமேஷ் (27) என்பவரை கைது செய்தாா். மேலும், அவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதேபோல், இரணியல் காவல் ஆய்வாளா் முத்துராஜ், அந்தப் பகுதியில் சுமை வாகனத்தில் மணல் கடத்திய கிருஷ்ண பிள்ளை (42), ரூபன்(43) ஆகிய 2 போ் மீது வழக்குப் பதிவு செய்து, அவா்களை கைது செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.