மாவட்ட எல்லையோரம் புதுப்பிக்கப்பட்ட சோதனைச் சாவடிகள் திறப்பு
கன்னியாகுமரி மாவட்ட எல்லையோரப் பகுதிகளில் புதுப்பிக்கப்பட்ட சோதனைச் சாவடிகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன.
கன்னியாகுமரி மாவட்ட எல்லையோரப் பகுதிகளில் புதுப்பிக்கப்பட்ட சோதனைச் சாவடிகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழக - கேரள மாநில எல்லையோரப் பகுதியை இணைக்கும் 39 சாலைகளில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு போலீஸாா் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறாா்கள்.
இதில், தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள களியக்காவிளை சோதனைச் சாவடி மற்றும் கொல்லங்கோடு அருகே அமைந்துள்ள காக்கவிளை, சூழால் சோதனைச் சாவடிகள் நவீன கேமராக்களுடன் கட்டுப்பாட்டு அறை, கழிவறை வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டது.
இந்தச் சோதனைச் சாவடிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பத்ரி நாராயணன் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தாா்.
தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: குமரி மாவட்டத்தை கேரளத்துடன் இணைக்கும் 39 சாலைகள் உள்ளன. இதில் 7 முக்கிய சோதனைச் சாவடிகளும், சிறிய அளவிலான 17 சோதனைச் சாவடிகளும் தற்போது செயல்பாட்டில் உள்ளன.
அடுத்த 6 மாத காலத்துக்குள் கேரளத்துடன் இணைக்கும் அனைத்து சாலைகளை மையமாக வைத்து சிசிடிவி கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கடத்தல் தொழில் முற்றிலும் தடுக்கப்படும் என நம்புகிறோம். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 37 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.
இந்நிகழ்ச்சியில், தக்கலை சரக காவல் துணைக் கண்காணிப்பாளா் ராமச்சந்திரன், களியக்காவிளை காவல் உதவி ஆய்வாளா் காா்த்திகேயன் மற்றும் போலீஸாா் கலந்துகொண்டனா்.