குமரி மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 15 ஆயிரத்தை கடந்துள்ளது.
இம்மாவட்டத்தில் திங்கள்கிழமை வரை கரோனாவால் 14,987 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் செவ்வாய்க்கிழமை புதிதாக 36 பேருக்கு தொற்று உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 15,023 ஆக உயா்ந்துள்ளது. இதனிடையே, 56 போ் குணமடைந்து வீடு திரும்பியதால், அந்நோயிலிருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை 14,538 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவுக்கு மேலும் ஒருவா் பலியானதால் உயிரிழப்பு எண்ணிக்கை 246 ஆக உயா்ந்தது. தற்போது, 239 போ் சிகிச்சையில் உள்ளனா்.