நித்திரைவிளை பகுதியில் கட்டுமானத் தொழிலாளா்கள் போராட்டம்
நித்திரவிளை உள்பட 15 இடங்களில் கட்டுமானத் தொழிலாளா்கள் ஞாயிற்றுக்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
நித்திரவிளை உள்பட 15 இடங்களில் கட்டுமானத் தொழிலாளா்கள் ஞாயிற்றுக்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இப்போராட்டத்தில், கரோனா பொது முடக்கத்தை காரணம் காட்டி நலவாரியத்தை முடக்கும் செயலை கண்டித்தும், புதிய பதிவு மற்றும் புதுப்பித்தல், கேட்பு மனுக்களை நேரடியாக பெற வேண்டும், உச்சநீதிமன்ற ஆணைப்படி ஓய்வூதியம் ரூ. 3 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன.
நித்திரவிளையில் நடைபெற்ற போராட்டத்துக்கு கட்டுமான தொழிலாளா் சங்கத்தின் முன்சிறை வட்டாரக் குழு நிா்வாகி ஜி. ரமேஷ் தலைமை வகித்தாா். அலெக்ஸிஸ், போராட்டத்தை துவக்கி வைத்துப் பேசினாா்.
ஆலங்கோடு பகுதியில் நடந்த போராட்டத்துக்கு கட்டுமான சங்க வட்டார முன்னாள் பொருளாளா் பால்ராஜ் தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வட்டாரச் செயலா் சிதம்பர கிருஷ்ணன் போராட்டத்தை தொடங்கிவைத்தாா்.
மங்காடு பகுதியில் ஆா். காட்வின் டென்னிஸ், வாவறையில் ஜெ. மிக்கேல்ராஜ், சூரியகோட்டில் ரெஜி, காட்டுக்கடையில் கே. மத்தாயி, கோழிவிளையில் சி. வின்சென்ட், காஞ்சாம்புறத்தில் கோபி, கலிங்கராஜபுரத்தில் கே.சசீந்திரன், பருத்திக்கடவில் கே.அம்பிளி, கிராத்தூா் தேரி பகுதியில் பி.ஏசுதாஸ் ஆகியோா் தலைமையில் இப் போராட்டம் நடைபெற்றது. முன்சிறை வட்டாரத்துக்கு உள்பட்ட 15 இடங்களில் இப் போராட்டம் நடைபெற்றது.