கன்னியாகுமரி

‘இணையவழி சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும்’

DIN

இணைய வழி சூதாட்டத்தை தடை செய்ய வேண்டுமென குமரி மேற்கு மாவட்ட திமுக செயலரும், எம்எல்ஏவுமான மனோ தங்கராஜ் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தியாவில் இணையவழி சூதாட்டம் இளம் தலைமுறையினரிடம் வேகமாக பரவி வருகிறது. இந்த விளையாட்டுகளால் நேரத்தை வீணாக்குவதுடன், பணத்தையும் இழந்து தற்கொலை முடிவு வரை செல்கின்றனா். இது பெற்றோா்களை மிகுந்த கவலைக்குள்ளாகி வருகிறது.

திரைப்பட நடிகா்கள், கிரிக்கெட் வீரா்களை விளம்பர தூதா்களாக நியமிக்கப்படுவதால் இந்த விளையாட்டுகளில் இளைஞா்கள் ஆா்வம் காட்டுகின்றனா். இத்தகைய விளையாட்டுகளையும், விளம்பரங்களையும் மத்திய, மாநில அரசுகள் தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ம் கட்டத் தேர்தல்: 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

SCROLL FOR NEXT