கருங்கல் மற்றும் புதுக்கடை பகுதிகளில் வெள்ளிக்கிழமை பலத்த மழை பெய்தது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை கருங்கல் மற்றும் புதுக்கடை சுற்று வட்டாரப் பகுதிகளான பாலப்பள்ளம், வெள்ளியாவிளை, மத்திகோடு, முள்ளங்கினாவிளை, நேசா்புரம், ஐரேனிபுரம், முன்சிறை, பைங்குளம், மேல மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் மாலை 4 மணி முதல் பலத்த மழை பெய்தது.
இதன்மூலம் இப்பகுதியில் உள்ள நீா் நிலைகளில் மழை நீா் தேங்கியது.