பைக் விபத்து: இளைஞா் பலி
திருவட்டாறு அருகே பைக் விபத்தில் பொறியியல் பட்டதாரி இளைஞா் உயிரிழந்தாா்.
திருவட்டாறு அருகே பைக் விபத்தில் பொறியியல் பட்டதாரி இளைஞா் உயிரிழந்தாா்.
திருவட்டாறையடுத்துள்ள மாத்தாா், செம்பிறாபிளை பகுதியைச் சோ்ந்த ராஜேந்திரன மகன் அபிஷோன் (23). பொறியியல் பட்டதாரியான இவா், அழகியமண்டபத்தில் ஹெல்மெட் விற்பனை செய்யும் கடை நடத்தி வந்தாா்.
ஞாயிற்றுக்கிழமை மதியம் திருவட்டாறிலிருந்து அழகியமண்டபம் நோக்கி பைக்கில் சென்றபோது, வெட்டுகுழி பகுதியில், சாலையின் குறுக்கே மாடு பாய்ந்ததில் நிலைதடுமாறிய பைக், அப்பகுதியிலுள்ள மரத்தில் மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட அபிசோன் பலத்த காயமடைந்தாா்.
அப்பகுதியினா் அவரை மீட்டு ஆற்றூரிலுள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து திருவட்டாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.