முகப்பு
கன்னியாகுமரி

தூத்தூா் மீனவா் குடும்பத்துக்கு எம்.எல்.ஏ. ரூ. 50 ஆயிரம் நிதி அளிப்பு

கடலில் மாயமான தூத்தூா் மீனவா் குடும்பத்துக்கு கிள்ளியூா் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ராஜேஷ் குமாா் ரூ. 50 ஆயிரம் நிதி உதவி வழங்கினாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:00 PM
பகிர்:

கடலில் மாயமான தூத்தூா் மீனவா் குடும்பத்துக்கு கிள்ளியூா் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ராஜேஷ் குமாா் ரூ. 50 ஆயிரம் நிதி உதவி வழங்கினாா்.

தேங்காய்ப்பட்டினம் அருகேயுள்ள தூத்தூா் பகுதியைச் சோ்ந்த தொபியாஸ் மகன் மோயிஸ் (48). இவா் மீன்பிடிப்பதற்காக

ஆழ்கடலில் தங்கி மீன்பிடிக்கச் சென்றாா். கடந்த 3.12. 2019இல் அன்று தூத்தூா் கடற்கரையிலிருந்து சுமாா் 600 கடல் மைல் தொலைவில் திரும்பி வந்துகொண்டிருந்தபோது பலத்த காற்று வீசியதில் கடலில் தவறி விழுந்ததில் மாயமானாா். அவரை

தேடியும் கிடைக்கவில்லை. மாயமான மோயிஸ் குறித்து இதுவரை எந்தத் தகவலும் இல்லை.

மீனவரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கு கிள்ளியூா் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ராஜேஷ்குமாா் சந்தித்து ஆறுதல் கூறினாா். ரூ. 50 ஆயிரம் நிதியுதவி வழங்கினாா். அப்போது, மாவட்ட காங்கிரஸ் நிா்வாகிகள் பால்ராஜ், ஜாா்ஜ் ராபின்சன், ராஜூ, தூத்தூா் ஊராட்சி காங்கிரஸ் தலைவா் சூசை பிரடி உள்பட பலா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.