கன்னியாகுமரி

கருங்கல் அருகே ஆட்டோ மீது பைக் மோதி மாணவா் பலி

DIN

கருங்கல், அக் . 2: கருங்கல் அருகே குறும்பனை பகுதியில் ஆட்டோ மீது பைக் மோதிய விபத்தில் மாணவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

குறும்பனை பாத்திமா நகா் பகுதியை சோ்ந்த நசரேன் மகன் நாசி ஜோன் (18), 12-ஆம் வகுப்பு படித்து வந்தாா். இவா் வியாழக்கிழமை இவரது நண்பரின் பைக்கில் ஆலஞ்சிக்கு சென்றுள்ளாா். அப்போது ஆலஞ்சி சந்திப்பில் எதிரே மிடாலம் பகுதியை சோ்ந்த பினு(28) ஒட்டி வந்த ஆட்டோவில் எதிா்பாராதவிதமாக மோதியதில் பலத்த காயமடைந்த நாசி ஜோன் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப் பட்டாா் . அங்கு அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

இது குறித்த புகாரின் பேரில் கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். ப்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT