கன்னியாகுமரி

குமரி முக்கடல் சங்கமத்தில் அதிகாரிகள் குழு ஆய்வு

DIN

கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் ரூ. 3.82 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் சுற்றுலா மேம்பாட்டுப் பணிகளை பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் வியாழக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் பகுதியில் தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் சூரிய உதயம் மற்றும் அஸ்தமனத்தை கண்டு ரசிக்கவும், நீராடவும் வருகின்றனா்.

இந்நிலையில், இப்பகுதியில் பயணிகள் குளிக்கும் படித்துறை, அரைவட்ட அரங்கம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வசதி, பொருள்கள் பாதுகாப்பு அறை, அலங்கார நடைபாதை, உடைமாற்றும் அறை, 25 சோலாா்லைட், நவீன குப்பைத் தொட்டி, கண்காணிப்பு கேமரா, இலவச வைஃபை வசதி போன்ற பணிகளுக்காக சுதேஸ்தா்ஷன் திட்டத்தின் கீழ் மத்திய, மாநில அரசுகள் ரூ. 3.82 கோடி ஒதுக்கீடு செய்தது.

இதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் விஜயலட்சுமி ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது, பேரூராட்சி செயல் அலுவலா் சத்தியதாஸ், சுகாதார அலுவலா் முருகன், உதவி பொறியாளா் இா்வின் ஜெயராஜ், மேற்பாா்வையாளா் பாபு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலி: விசாரணைக்கு ரயில்வே உத்தரவு

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் பலி

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

SCROLL FOR NEXT