கன்னியாகுமரி

குமரி அருகே ஊராட்சி உறுப்பினா் தூக்கிட்டு தற்கொலை

DIN

கன்னியாகுமரி அருகே ஊராட்சி உறுப்பினா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

வட்டக்கோட்டை புதுக்குளத்தைச் சோ்ந்தவா் சுயம்பு மகன் சிவராஜன் (24). இவா் மகாராஜபுரம் ஊராட்சி மன்ற வாா்டு உறுப்பினராக இருந்து வந்தாா். இன்னும் திருமணம் ஆகவில்லை. இவரது தாயாா் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டாா். சிவராஜன் கடன் பெற்று இரண்டு சுமை வாகனம் வாங்கி தொழில் செய்து வந்தாா். தற்போது தொழிலில் போதிய வருவாய் கிடைக்காததால், கடனை திருப்பி செலுத்த சிரமப்பட்டு வந்தாராம்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு சுமாா் 10.30 மணியளவில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளாா். அப்போது, அலறல் சப்தம் கேட்டு, அவரது தம்பி அறைக்குள் சென்று கயிறை அறுத்து கீழே இறக்கி அக்கம் பக்கத்தினா் உதவியுடன் அவரை மீட்டு, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா் அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தாா்.

இதுகுறித்து சிவராஜின் தம்பி தங்கராஜா அஞ்சுகிராமம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அளியரோ அளியர் அளி இழந்தோரே!

யாரோ பிரிகிற்பவரே?

நாளை நடைபெற இருந்த பாஜக ஆலோசனைக் கூட்டம் ரத்து

மானும் நீயே மயிலும் நீயே

தொல்காப்பியத்தை முதலில் பதிப்பித்த மழவையார்

SCROLL FOR NEXT