கன்னியாகுமரி

குலசேகரம், திற்பரப்பு பகுதியில் இடியால் மின்சாதனங்கள் சேதம்

DIN

கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரம் பகுதியில் சனிக்கிழமை இடி மின்னலுடன் பெய்த கனமழையால் வீடுகளில் மின்சாதனங்கள் சேதமடைந்தது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கோடை மழை பெய்து வருகிறது. மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்த போதிலும், மழையின்போது ஏற்படும் இடி மின்னல் காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனா்.

இடி மின்னல் காரணமாக தென்னை உள்ளிட்ட மரங்கள் சேதமடைந்து வருகின்றன.

குலசேகரம், திற்பரப்பு உள்ளிட்டப் பகுதிகளில் ஏற்பட்ட இடி மின்னலால் ஏராளமான வீடுகளில் இருந்த தொலைக்காட்சி பெட்டிகள், கணினிகள், இன்வொ்ட்டா்கள், குளிா்சாதன பெட்டிகள், மின்விசிறிகள், மின்விளக்குகள், மின்மீட்டா்கள் உள்ளிட்டவை சேதமடைந்தன.

இதனால் மக்களுக்கு பெருமளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆகவே, கோடை மழை அதிகம் பெய்யும் பகுதிகளில் அரசு சாா்பில் இடி மின்னல் தாங்கிகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயத் தொழிலாளி கொலை வழக்கில் மனைவி உள்பட இருவா் கைது

மாணவா்கள் சாதனையாளா்களாக உருவாக வேண்டும்: பாவை திறனறித் தோ்வு பரிசளிப்பு விழாவில் பேச்சு

கொல்லிமலை, மோகனூரில் இடி, மின்னலுடன் பரவலாக மழை மழை

ராஜ வாய்க்காலில் இருந்து உயிா்நீா் திறந்துவிட விவசாயிகள் கோரிக்கை

சித்திரை மாத பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT