களியக்காவிளையில் சேதமடைந்த மின்கம்பம் அகற்றப்பட்டு, புதிய மின்கம்பம் நடப்பட்டது.
களியக்காவிளை சந்திப்பிலிருந்து மேக்கோடு செல்லும் சாலை திருப்பம் அருகே தனியாா் நிதிநிறுவனத்தின் முன் பகுதியில் மின்கம்பம் முற்றிலும் சேதமடைந்து அபாய நிலையில் காணப்பட்டது.
இந்த மின்கம்பத்தை அகற்றி புதிய மின்கம்பம் அமைக்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தினமணியில் கடந்த 16 ஆம் தேதி செய்தி வெளியானது.
இந்நிலையில் சேதமடைந்த மின் கம்பம் வெள்ளிக்கிழமை அகற்றப்பட்டு, புதிய மின்கம்பம் நடப்பட்டது. இப் பணிகள் காரணமாக அன்றைய தினம் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை களியக்காவிளை ஆா்.சி. தெரு மற்றும் அதையொட்டிய பகுதிகளில் மின் விநியோகம் தடைசெய்யப்பட்டிருந்தது.