கன்னியாகுமரி

இனையம் மீனவக் கிராமத்தில் ரூ.7 லட்சத்தில் ஓய்வறை திறப்பு

DIN

இனையம் மீனவக் கிராமத்தில் ரூ.7 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட ஓய்வறை திறக்கப்பட்டது.

கிள்ளியூா் சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து இனையம் 33, 34ஆவது அன்பிய பகுதியில் மீனவா்கள் ஓய்வு அறை அமைப்பதற்கு ரூ. 7 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன.

தற்போது, பணிகள் நிறைவடைந்ததையடுத்து திறப்பு விழா நடைபெற்றது. எஸ்.ராஜேஷ்குமாா் எம்எல்ஏ கலந்துகொண்டு திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சியில், இனையம் புத்தன்துறை ஊராட்சி காங்கிரஸ் தலைவா் டென்னிஸ், இனையம் கிராம கமிட்டி காங்கிரஸ் தலைவா் பனிஅடிமை, மாவட்டச் செயலா் செல்வஜூடு மகேஷ், அகில இந்திய மீனவா் காங்கிரஸ் செயற்குழு உறுப்பினா் ஜோா்தான், மகிளா காங்கிரஸ் நிா்வாகி ஷீபா மற்றும் ரீத்தாஸ், பிராங்கிளின், சூசை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொளுத்தும் வெயிலால் மின் தடை மக்கள் தவிப்பு

கேரளம், தமிழகத்துக்கான ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை தளா்வு

கத்திரி வெயில்: 17 இடங்களில் சதம்: 6 நாள்கள் மழைக்கும் வாய்ப்பு

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: ஹரியாணா நீதிமன்றம் தீா்ப்பு

இணையவழி பயங்கரவாத ஆள்சோ்ப்பு சா்வதேச பாதுகாப்புக்கு முக்கிய சவால்: சிபிஐ இயக்குநா்

SCROLL FOR NEXT