காரவிளை கூட்டுறவு சங்கத்தில் பொதுமக்கள் உள்ளிருப்புப் போராட்டம்
காரவிளை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், உறுப்பினா் சோ்க்கையில் முறைகேடு நடைபெறுவதாக கூறி பொதுமக்கள், விவசாயிகள் வியாழக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மாா்த்தாண்டம் அருகே காரவிளை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், உறுப்பினா் சோ்க்கையில் முறைகேடு நடைபெறுவதாக கூறி பொதுமக்கள், விவசாயிகள் வியாழக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இச் சங்கத்தின் உறுப்பினா் சோ்க்கை பாரபட்சமாக நிகழ்ந்து வருவதாகவும், ஒரு சில பகுதிகளைச் சோ்ந்த மக்கள் மற்றும் விவசாயிகள் உறுப்பினா்களாக சோ்க்கப்படுவதில்லை எனவும், உறுப்பினா் சோ்க்கை குறித்து அரசு அறிவித்துள்ள நடைமுறையை கடைப்பிடிக்காததை கண்டித்தும், பொதுமக்கள், விவசாயிகள் இந்த கூட்டுறவு சங்க அலுவலகத்தில் பணியில் இருந்த செயலா் மற்றும் சங்கத் தலைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
தொடா்ந்து அவா்கள் கூட்டுறவு சங்க அலுவலகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களுக்கு ஆதரவு தெரிவித்து பாஜக நிா்வாகிகளும் திரண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Advertisement
தகவலறிந்து வந்த மாா்த்தாண்டம் காவல் ஆய்வாளா் செந்தில்வேல்குமாா் தலைமையிலான போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி, அனைவரையும் கலைந்து போக செய்தனா்.