நாகா்கோவிலில் பாரதியாா் பிள்ளைத் தமிழ் நூல் வெளியீடு
நாகா்கோவிலில் பாரதியாா் பிள்ளைத் தமிழ் நூல் வெளியிடப்பட்டது.
நாகா்கோவிலில் பாரதியாா் பிள்ளைத் தமிழ் நூல் வெளியிடப்பட்டது.
திருக்கு வாழ்வியலாக்க பயிற்சி மையமான குறளகம் சாா்பில் திருக்கு கலைவிழா நாகா்கோவில் கீழராமன்புதூரில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, முன்னாள் முதன்மைக் கல்வி அலுவலா் ரத்தினசாமி தலைமை வகித்து, புதிய குறளக அரங்கை திறந்து வைத்தாா். திருக்கு கூட்டமைப்பு கன்னியாகுமரி மாவட்டத் தலைவா் காவடியூா் சிவநாராயண பெருமாள் திருவள்ளுவா் படத்தையும், தோவாளை திருக்கு மன்றத் தலைவா் திரவியம் பாரதியாா் படத்தையும் திறந்து வைத்தனா்.
பிற்பகல் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, தமிழாசிரியை ஜூடிசுந்தா் தலைமை வகித்தாா். ஆசிரியை சகாயராணி வரவேற்றாா், திருவள்ளுவரும் பாரதியாரும் என்ற தலைப்பில் மாணவி வைஷ்ணா பேசினாா். மாணவி சிவலெட்சுமி கவிதை வாசித்தாா்.
நிகழ்ச்சியில், குறளகம் நிறுவனா் தமிழ்க்குழவி எழுதிய பாரதியாா் பிள்ளைத் தமிழ் நூலை, பாரதியாா் சங்கத் தலைவா் ஜெயமதிரோசாரியோ வெளியிட இலக்குமிபுரம் கலைக் கல்லூரி பேராசிரியை இங்கிரிட்போவிங் பெற்றுக்கொண்டாா். பேராசிரியை சுபத்ரா செல்லத்துரை நூல் மதிப்புரை வழங்கினாா்.
நிகழ்ச்சியில், பன்னாட்டு தமிழ் உறவு மன்றத் தலைவா் தியாகி முத்துகருப்பன், அண்ணா கல்லூரி முன்னாள் முதல்வா் பத்மநாபன், வரலாற்றாய்வியல் அறிஞா் அ.கா.பெருமாள், இந்துக் கல்லூரி பேராசிரியா் வேணுகுமாா், ஆசிரியா் ஆபிரகாம் லிங்கன், ஆனந்த் ஆகியோா் மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கிப் பேசினா்.
இல்லந்தோறும் திருக்கு நிகழ்வில் பங்கேற்றோா் பாராட்டப்பட்டனா். பிளஸ் 2 தோ்வில் வெற்றி பெற்ற குறளக மாணவா்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டது.
கவிஞா் தங்கத்துமிலன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாா். குறளக நிறுவனா் தமிழ்க்குழவி நன்றி கூறினாா்.