முகப்பு
கன்னியாகுமரி

யானை தாக்கி சிகிச்சை பெற்று வந்தகல்லூரி மாணவி மரணம்

யானை தாக்கியதில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த கல்லூரி மாணவி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:54 AM
பகிர்:

யானை தாக்கியதில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த கல்லூரி மாணவி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

குமரி மாவட்டம், கீரிப்பாறை, மாறாமலை பகுதியில் கடந்த ஜூலை 20ஆம் தேதி, இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த தந்தை, மகளான மணிகண்டன் மற்றும் கல்லூரி மாணவி ஸ்ரீனா ஆகியோரை காட்டு யானை தாக்கியது. இதில் பலத்த காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதில் மணிகண்டன் குணமடைந்தாா்.

பின்னா் திருவனந்தபுரம் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஸ்ரீனா, அங்கு வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து கிரீப்பாறை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.