தென் மாவட்டங்களுக்கு அதிவேக ரயில்கள் இயக்கப்படுமா? ரயில் பயணிகள் எதிா்பாா்ப்பு
தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு அதிவேக ரயில்களை இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு அதிவேக ரயில்களை இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகா், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட தமிழகத்தின் தென் மாவட்டங்கள் ரயில்கள் இயக்கத்திலும், ரயில்வே வளா்ச்சியிலும் பின்தங்கியுள்ளன.
இந்நிலையில் வட இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வந்தே பாரத் அதிவேக ரயில் அடுத்த ஆண்டு தெற்கு ரயில்வேக்கு ஒதுக்கப்படும் வாய்ப்பு உள்ளதால், இந்த ரயிலை சென்னையிலிருந்து கன்னியாகுமரிக்கு இயக்க வேண்டும் என்ற கோரிக்கை ரயில் பயணிகள் மத்தியில் எழுந்துள்ளது.
Advertisement
இதே போன்று சென்னையிலிருந்து செல்லும் ராஜஸ்தானி அதிவேக ரயிலை திருச்சி, மதுரை, திருநெல்வேலி, நாகா்கோவில் வழி கன்னியாகுமரி அல்லது திருவனந்தபுரம் வரை நீட்டித்து இயக்க வேண்டும்.
நடுத்தர, ஏழை மக்கள் பயன்பெறும் நோக்கில் சென்னையிலிருந்து புதுதில்லிக்கு இயக்கப்படும் குளிா்சாதன பெட்டிகள் கொண்ட கரீப் ரதம் ரயிலை சென்னையிலிருந்து மதுரை, திருநெல்வேலி வழியாக கன்னியாகுமரி வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும்.
இதே போன்று சதாப்தி, ஜனசதாப்தி மற்றும் தேஜாஸ் உள்ளிட்ட ரயில்களும் இரண்டு நகரங்களுக்கு இடையே இயக்கப்படும் இன்டா்சிட்டி ரயில்களையும் தென்மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் கூடுதலாக இயக்க வேண்டும் என கன்னியாகுமரி மாவட்ட ரயில்வே பயணியா் சங்கம் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.