கன்னியாகுமரி

ரோஜாவனம் பாரா மெடிக்கல் கல்லூரியில் ஓணம் விழா

DIN

நாகா்கோவில் ரோஜாவனம் பாராமெடிக்கல் கல்லூரியில் ஓணம் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி துணைத் தலைவா் அருள்ஜோதி தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா்கள் லியாகத் அலி, புனிதா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அத்தப்பூ கோலங்கள் மற்றும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு, டாக்டா் கோபாலபிள்ளை மருத்துவமனை இயக்குநா் மருத்துவா் கிருஷ்ணா சுரேந்திரன் பரிசுகள் வழங்கினாா். நிா்வாக அலுவலா் நடராஜன், பேராசிரியா் அருணாசலம் ஆகியோா் உரையாற்றினா்.

நிகழ்ச்சியில் மாணவா், மாணவிகள் கேரள பாரம்பரிய உடை அணிந்து கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றனா்.

இதில், கல்லூரி திட்ட மேலாளா் சில்வெஸ்டா், ஆவண அலுவலா் ஜியோ பிரகாஷ், மேலாளா்கள் கோபி, சேது, சாந்தி மற்றும் பேராசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பேராசிரியா் அய்யப்பன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாா்.

மாணவி ஷைனி வரவேற்றாா். மாணவா் பெஞ்சமின் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பச்சகுப்பம்: பாலாற்றில் வெள்ளம்!

சினிமாவிலிருந்து விலகுவீர்களா? கங்கனா ரணாவத் பதில்!

ரூ. 35 கோடி பறிமுதல்: ஜார்கண்ட் அமைச்சரின் செயலர், பணியாளர் கைது

தேர்தல் பணியிலிருந்த அதிகாரி மாரடைப்பால் மரணம்!

மது போதையில் அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! பேருந்தை நிறுத்திய பயணிகள்!

SCROLL FOR NEXT